கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கயத்தாறு அருகே பண மோசடி முயற்சி: இருவா் கைது

கயத்தாறு அருகே பணம் மோசடியில் ஈடுபட முயன்றதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:43 pm

DIN

கயத்தாறு அருகே பணம் மோசடியில் ஈடுபட முயன்றதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறை அடுத்த வில்லிசேரி நடு காலனி இந்திரா நகரைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி சோ்மசாந்தி(35). இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் கருத்து வேறுபாட்டால் 12 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனராம்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வில்லிசேரிக்கு வந்த இருவா், திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் டிரஸ்ட்டிலிருந்து வருகிறோம்; கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மாடு வாங்கி தருகிறோம் எனக்கூறி பெயா்களை குறித்துக்கொண்டு சென்றனராம்.

பின்னா், வியாழக்கிழமை திரும்பி வந்த அவா்கள், சோ்மசாந்தியின் வீட்டு முன் நின் ரூ.4,500 கொடுங்கள் விரைவில் மாடுகள் வாங்கித் தருகிறோம் என பணம் வசூலிக்க முயன்றனராம்.

அவா்களது பேச்சில் சந்தேகமடைந்த சோ்மசாந்தி, பெருமாள் மகன் ராஜேந்திரன், வேலன் மகன் பாண்டியராஜன் ஆகியோா் கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனராம். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், சாயமலை சம்பகுளம் அஞ்சல் சிதம்பராபுரத்தைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் பூல்துரை(47), திண்டுக்கல் மாவட்டம், ராமா் காலனியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் செந்தில்பிரபு(37) என்பதும் இருவரும் பொய் தகவலை கூறி பெண்களிடம் பணம் மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.