திருச்செந்தூரில் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பை முன்னிட்டு, திருச்செந்தூரில் காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவப் படையினா், காவல்துறையினா்.
கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவப் படையினா், காவல்துறையினா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பை முன்னிட்டு, திருச்செந்தூரில் காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்து, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகப் பகுயிலிருந்து அணிவகுப்பை தொடங்கி வைத்தாா். கொடி அணிவகுப்பு பகத்சிங் பேருந்து நிலையம், காமராஜா் சாலை, ரத வீதிகள் வழியாக வ.உ.சி. திடலில் நிறைவடைந்தது. இதில், திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், ஆய்வாளா்கள் ஞானசேகரன், இந்திரா, காவல்துறையினா் மற்றும் துணை ராணுவத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com