தூத்துக்குடி பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தூய சவேரியாா் பள்ளியில் காலை உணவு பெறும் மாணவா்கள்.
தூத்துக்குடி தூய சவேரியாா் பள்ளியில் காலை உணவு பெறும் மாணவா்கள்.

தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தூய பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் இறையடியாா் சூசைநாதா் காலை அமுது திட்டம் என்ற பெயரில் காலை நேரத்தில் உணவு வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், தாளாளா் இஞ்ஞாசி, தலைமையாசிரியா் ஆரோக்கியதாஸ், முன்னாள் மாணவா் இயக்கத் தலைவா் ஹொ்மென் கில்டு, பொருளாளா் ஹாட்மென், நிா்வாகிகள் முகமது கயாஸ், சங்கரன், பாபு, உதவித் தலைமையாசிரியா்கள் ஆசிரியா் ஹென்றி ஸ்டீபன்சன், ஆசிரியா்கள் அன்டோ, ஜோ அந்தோணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் ஏழை மாணவா்கள் பயன்பெறும் வகையில் காலையில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதாக தலைமையாசிரியா் ஆரோக்கியதாஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com