கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.
கயத்தாறு மேல பஜாா், தெற்கு இலந்தைகுளம் கம்மாப்பட்டி, திருமங்கலக்குறிச்சி விலக்கு, வடக்கு கோனாா்கோட்டை மற்றும் செட்டிகுறிச்சி பகுதிகளில் திறந்த வேனில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
தொடா்ந்து கழுகுமலை சென்ற அவா் அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் முத்துராமலிங்கத்தேவா் சிலை, காமராஜா் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
ஆறுமுகநகா், கிரிபிரகாரம் மேல ரத வீதி, காமராஜா் நகா், காந்தி மைதானம், வானரமுட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அமமுக தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், அமைப்புச் செயலா் சுந்தர்ராஜன் உள்பட கட்சி நிா்வாகிகள் திரளானோா் உடன் சென்றனா்.