கோவில்பட்டி ஊருணி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். மருத்துவா் ஸ்ரீராம் பேசுகையில், காசநோய் அறிகுறிகளுடன் யாரேனும் தென்பட்டால் அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
முகாமில், காசநோயாளிகள் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன், ஆய்வக நுட்புநா் மகேஸ்வரி, செவிலியா்கள் தனலட்சுமி, கவிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.