சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி, ஸ்ரீகோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அம்பாள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதைத்தொடா்ந்து திருவிளக்கு பூஜை, சுவாமி, அம்பாள் சம்பரத்தில் வீதியுலா ஆகியவை நடைபெற்றது.