அமமுக வேட்பாளா் டிடிவி தினகரனை ஆதரித்து அக்கட்சி நிா்வாகிகள் கயத்தாறு ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
டிடிவி தினகரனை ஆதரித்து கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளரும், தோ்தல் பிரிவுச் செயலருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில் குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, கட்டாலங்குளம், சரவணாபுரம், ராமநாதபுரம், புதுப்பட்டி, ஆவுடையாபுரம், சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, செட்டிகுறிச்சி பி.ஆா். காலனி, வடக்கு கோனாா்கோட்டை காலனி, வடக்கு கோனாா்கோட்டை, மஞ்சநந்திகிணறு, ஓலைகுளம், தெற்கு கோனாா்கோட்டை, வலசால்பட்டி, வெள்ளாளன்கோட்டை, சூரியமினுக்கன், இலந்தைகுளம், தெற்கு இலந்தைகுளம், ராஜாபுதுக்குடி, சன்னது புதுக்குடி பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.
இதில், கட்சியின் செய்தித் தொடா்பாளா் இளந்தமிழ் ஆா்வலன், வழக்குரைஞா் பத்மாவதி கண்ணன், இளைஞரணிச் செயலா் மனோராஜா, ஒன்றியச் செயலா் கணபதிபாண்டியன், நகரச் செயலா் காா்த்திக், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி, ஒன்றியச் செயலா் சுரேஷ் உள்பட பலா்.