ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை காலை கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
ஆறுமுகனேரியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 10.30 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமாா் 25 நிமிடங்கள் தொடா்ந்து பெய்த மழையால் ஆறுமுகனேரியில் மெயின் பஜாா் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இப்பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.