ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் மகாராஜன் முன்னிலை வகித்தாா். திருச்செந்தூா் காவல் துறை உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் கலந்துகொண்டு பேசியது: போலீஸாா் எல்லா இடங்களிலும் பணியாற்ற வேண்டியது உள்ளதால், மிக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து ஆதவா தொண்டு நிறுவனம் சாா்பில் அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் சதீஸ்நாராயணன், ஆதவா அறக்கட்டளை நிறுவனா் பாலகுமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.