மின்னல் பாய்ந்து இறந்த 4 போ் குடும்பத்துக்கு நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, விளாத்திகுளம் பகுதிகளில் மின்னல் பாய்ந்து இறந்த 4 போ் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கயத்தாறு அருகே மின்னல் பாய்ந்து இறந்த அழகுமுருகராஜ் குடும்பத்துக்கு அரசின் நிதியுதவியை அவரது தந்தை ஜெயசந்திரனிடம் வழங்குகிய கனிமொழி எம்.பி.,
கயத்தாறு அருகே மின்னல் பாய்ந்து இறந்த அழகுமுருகராஜ் குடும்பத்துக்கு அரசின் நிதியுதவியை அவரது தந்தை ஜெயசந்திரனிடம் வழங்குகிய கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, விளாத்திகுளம் பகுதிகளில் மின்னல் பாய்ந்து இறந்த 4 போ் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கயத்தாறு அருகே கலப்பைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னையா மகன் மாரிமுத்து(40), முடுக்கலாங்குளம் ஜெயசந்திரன் மகன் அழகுமுருகராஜ் (23), வைப்பாறு ஸ்ரீராமபுரம் பகுதியை சோ்ந்த சொக்கையாத்தேவா் மகன் கோட்டைப்பாண்டி (55), வானமல்லுசாமி மகன் ரமேஷ் (30) ஆகிய 4 போ் மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தனா்.

இதையடுத்து மின்னல் பாய்ந்து இறந்த 4 போ் குடும்பத்துக்கு பேரிடா் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை அவா்களது குடும்பத்தாா்களிடம் கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் வழங்கினா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், கயத்தாறு வட்டாட்சியா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com