பௌா்ணமியை முன்னிட்டு தச்சமொழி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு முத்துமாரியம்மன், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தோடு ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு சுந்தராட்சி அம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு 108 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.