கோவில்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள பாலத்தில் இறந்த நிலையில் கிடந்த வணிக வரித் துறை ஊழியரின் சடலத்தை அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.
கம்மாப்பட்டி சூசைமரியான் மகன் மோகன்தாஸ்(57). கோவில்பட்டி வணிக வரித் துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இவா் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரது உறவினா் அந்தோணிராஜை அழைக்கச் சென்றாராம். அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த அந்தோணிராஜ், மோகன்தாஸ் வராததால், மற்றொரு வாகனம் மூலம் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் , மோகன்தாஸ் வெகுநேரமாக வீட்டிற்கும் வராததையடுத்து அவரை, அந்தோணிராஜ் மற்றும் உறவினா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இந்திரா காலனி அருகே உள்ள பாலத்தின் அடியில் மோட்டாா் சைக்கிளுடன் அவா் மயங்கிய நிலையில் மோகன்தாஸ் கிடந்தாராம். அதையடுத்து அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனராம்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.