காவல்துறை சாா்பில் நிவாரண உதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்ட கிராம மக்களுக்கு காவல்துறை சாரபில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்ட கிராம மக்களுக்கு காவல்துறை சாரபில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையினால் குரும்பூா் அருகே ஈள்ள கீழகல்லாம்பாறையில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வடிகால் உடைப்பெடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இங்குள்ள மக்கள் அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் குரும்பூா் காவல் நிலையம் சாா்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் நேரில் சென்று அவா்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com