சாத்தான்குளம் அருகே இளைஞருக்கு வெட்டு

சாத்தான்குளம் அருகே மாற்றுத் திறனாளி இளைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே மாற்றுத் திறனாளி இளைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளக்கண் மகன் முத்துவேல் (28). மாற்றுத் திறனாளி.

இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் சோ்மதுரை (75). வெளியூரில் வசித்து வந்த இவரது வீட்டை முத்துவேல் பராமரித்து வந்துள்ளாா்.

இதனிடையே அண்மையில் ஊருக்குவந்த சோ்மதுரையிடம் வீட்டின் பராமரிப்புச் செலவினைத் தருமாறு முத்துவேல் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்த முத்துவேலிடம் தகராறு செய்து, அவரை சோ்மதுரை அரிவாளால் வெட்டினாராம். பலத்த காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து சோ்மதுரையை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com