சாத்தான்குளம் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில்களில் 4ஆவது புரட்டாசி சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீ பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, ஸ்ரீஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ ஆஞ்சநேயா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பக்தா்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை சான்றோா் குலம் வழிபாடு ஆதீனம் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.
தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீபெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினா்.