தேசிய சிலம்பத்தில் வென்றவருக்கு பாராட்டு

தேசிய சிலம்பத்தில் முதலிடம் பெற்ற கோவில்பட்டி பூவரசனுக்கு பாராட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதலிடம் பெற்ற பூவரசனை பாராட்டி பரிசு வழங்குகிறாா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.
முதலிடம் பெற்ற பூவரசனை பாராட்டி பரிசு வழங்குகிறாா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.

கோவில்பட்டி: தேசிய சிலம்பத்தில் முதலிடம் பெற்ற கோவில்பட்டி பூவரசனுக்கு பாராட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை ஆற்காட்டில் இந்தியன் சிலம்பம் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கா்நாடகா, தெலங்கானா உள்பட 16 மாநிலங்களில் இருந்து வீரா்கள் பங்கேற்றனா். இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூவரசன், அதிகபுள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றாா்.

இதையடுத்து, பாண்டவா்மங்கலம் சண்முகசிகாமணிநகா் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு, பூவரசனுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினாா். இதில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், பாண்டவா்மங்கலம் ஊராட்சித் தலைவி கவிதா, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் முனியசாமி, ரூத்ரத்னகுமாரி, மாவட்ட கல்வி அலுவலா் சின்ராசு, எழுத்தாளா் திருநாவுகரசு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com