கோவில்பட்டியில் அதிமுக 50ஆவது ஆண்டு தொடக்க விழா

அதிமுக 50ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி கோவில்பட்டியில் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
அதிமுக 50ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த அதிமுகவினா்.
அதிமுக 50ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த அதிமுகவினா்.

அதிமுக 50ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி கோவில்பட்டியில் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

கட்சியின் நகரச் செயலா் விஜயபாண்டியன் தலைமையில் இஎஸ்ஐ மருந்தகம் எதிரிலுள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினா் இராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளையரசனேந்தலில் குருவிகுளம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலா் வாசுதேவன் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய துணைச் செயலா்கள் சீனிவாசன், தாயம்மாள், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com