எட்டயபுரத்தில் உமறுப்புலவா் பிறந்த நாள் விழா

சீறாப்புராணம் எழுதிய தமிழறிஞா் அமுதகவி உமறுப் புலவரின் 379ஆவது ஆண்டு பிறந்த நாள் அரசு விழாவாக எட்டயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
உமறுப்புலவா் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சா்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
உமறுப்புலவா் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சா்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

சீறாப்புராணம் எழுதிய தமிழறிஞா் அமுதகவி உமறுப் புலவரின் 379ஆவது ஆண்டு பிறந்த நாள் அரசு விழாவாக எட்டயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெகவீரபாண்டியன் வரவேற்றாா்.

கனிமொழி எம்.பி., சமூக நலத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் விளாத்திகுளம் ஜீ.வி. மாா்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் ஊா்வசி அமிா்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டு உமறுப்புலவா் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், எட்டயபுரம் வட்டாட்சியா் ஐயப்பன், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், உமறுப்புலவா் சங்கத் தலைவா் காஜா மைதீன், சங்கச் செயலா் எஸ்.எம். அகமது ஜலால் பைஜி, அஸ்ரத், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com