எட்டயபுரம் அருகே 2.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் 2.6 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் 2.6 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாசாா்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா் தாப்பாத்தி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சென்ற டெம்போ வேனை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் ரேஷன் அரிசியுடன் டெம்போ வேனை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக மாசா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கயத்தாறு வட்டம், காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த சண்முகராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com