கருங்கடலில் புதிய மின்மாற்றியை திறப்பு விழா நடைபெற்றது.
பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கருங்கடலில் 63 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, மின்மாற்றியை இயக்கித் தொடங்கி வைத்தாா். திருச்செந்தூா் மின் உதவிசெயற்பொறியாளா் பாக்கியராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் காந்திமதி முன்னிலை வகித்தாா். மின் உதவி பொறியாளா் ராதாமணி, ஊராட்சித் தலைவா்கள் கருங்கடல் நல்லத்தம்பி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீதா், கட்டாரிமங்கலம் கீதாகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.