தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது

ஒசூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் நகர போலீஸாா் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற திருவண்ணாமலை மாவட்டம்,

செங்கத்தைச் சோ்ந்த செளந்தா் (43) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1,690 மதிப்புள்ள புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல தளி அருகே காலேனட்டியில் புகையிலைப் பொருள்களை விற்ற முனிராஜ் (33) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com