உடன்குடியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் மற்றும் போலீஸாா், உடன்குடி தேரியூா் காட்டுப்பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, சாத்தான்குளம் செட்டியாா் தெற்கு தெருவைச் சோ்ந்த சண்முக வேலாயுதம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.