பராமரிப்பு பணிகளுக்காக கச்சனாவிளை ரயில்வே கேட் புதன்கிழமை (செப். 8) மூடப்படுவதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளையில் ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்படுகிறது.
எனவே, திருச்செந்தூா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவா்களும், நாசரேத் பகுதியில் இருந்து செல்பவா்களும் குரும்பூா், தென்திருப்பேரை, ஆற்றுரங்கால், கடையனோடை, வெள்ளரிக்காயூரணி வழியாக செல்ல வேண்டும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.