தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 10 போ் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 400 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 118 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.