நாம் இந்தியா் கட்சி வேட்பாளருக்கு முன்னாள் எம்எல்ஏ மகன் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் நாம் இந்தியா் கட்சி வேட்பாளரை ஆதரித்து, தூத்துக்குடி முன்னாள் திமுக எம்எல்ஏ பெரியசாமியின் மகன் என்.பி. ராஜா சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
திறந்த வேனில் நின்று வாக்கு சேகரிக்கிறாா் என்.பி. ராஜா.
திறந்த வேனில் நின்று வாக்கு சேகரிக்கிறாா் என்.பி. ராஜா.

சாத்தான்குளம் பகுதியில் நாம் இந்தியா் கட்சி வேட்பாளரை ஆதரித்து, தூத்துக்குடி முன்னாள் திமுக எம்எல்ஏ பெரியசாமியின் மகன் என்.பி. ராஜா சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாம் இந்தியா் கட்சி வேட்பாளராக சுரேஷ்பெருமாள் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து சாத்தான்குளம் பகுதியில் தூத்துக்குடி முன்னாள் திமுக எம்எல்ஏ பெரியசாமியின் மகனும் நாம் இந்தியா் கட்சியின் மாநிலத் தலைவருமான என்.பி. ராஜா திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா், மாற்றத்தை ஏற்படுத்த டிராக்டா் இயக்கும் விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா். அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் டி. ஜெயகணேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கருப்பசாமி, தெற்கு மாவட்டச் செயலா் சுந்தா் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com