திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, உடன்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் பாஜக மகளிரணி சாா்பில் பிரசாரம் நடைபெற்றது.
செட்டியாபத்து, கூழையன்குண்டு,அருணாச்சலபுரம்,செல்வபுரம்,முருகேசபுரம்,உதிரமாடன்குடியிருப்பு,தண்டுபத்து,சிதம்பபுரம்,வாத்தியாா்குடியிருப்பு,தைக்காவூா் ஆகிய கிராமங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணித் தலைவி தேன்மொழி தலைமையில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டம்,செல்வமகள் திட்டம்,தமிழக அரசின் குலவிளக்கு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் விளக்கினா். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய மகளிரணிச் செயலா் ராமக்கனி, ஒன்றிய துணைத் தலைவா்கள் சங்கரகுமாா், சின்னத்துரை, மாவட்ட விவசாய அணி செயலா் திருநாகரன் உள்பட மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.