திருச்செந்தூா் அருகேயுள்ள பூச்சிக்காடு வாக்குச்சாவடியில் திருச்செந்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைப்பாண்டியன் வாக்களித்தாா்.
அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைப்பாண்டியன் தனது சொந்த ஊரான பள்ளிப்பத்து அருகேயுள்ள பூச்சிக்காடு கிராமத்தில் இந்து உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 9.09 மணிக்கு வாக்களித்தாா். அவருடன் மனைவி திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன், குடும்பத்தினரும் வாக்களித்தனா்.