கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னா் மயங்கி விழுந்த காங்கிரஸ் பிரமுகா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி ஜோதி நகரைச் சோ்ந்த சொரிமுத்து மகன் சந்திரமோகன்(59). இவா் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தாா். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.