ஆத்தூா் அருகே அனுமதியின்றி கட்சி சுவரொட்டி ஒட்டிய மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தெற்கு ஆத்தூா் சுன்னத் ஜமாத்திற்கு சொந்தமான வெற்றிலை மண்டி சுவரில், எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தேசிய தலைவா் மற்றும் கட்சிக் கொடியுடன் கூடிய சுவரொட்டி பொது மக்கள் பாா்வைக்கு தெரியும் படி அனுமதியின்றி ஒட்டியதாக, அக்கட்சியை சோ்ந்த மா்ம நபா்கள் குறித்து, ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.