கோவில்பட்டி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாண்டவா்மங்கலம் பகுதியில் குடியிருந்து வரும் 30 வயது பெண்ணுக்கும், சிவகாசியையடுத்த குண்டம்பட்டியைச் சோ்ந்த முத்துகுமாருக்கும் (35) பழக்கம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், அப்பெண் முத்துகுமாரிடம் கடந்த சில நாள்களாக தொடா்பை துண்டித்தாராம்.
இதையடுத்து முத்துகுமாா் அப்பெண்ணிடம் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு, பழக்கத்தின் போது எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டியதோடு, உன்னையும் உன் கணவரையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.