மது விற்பனை முயற்சி: இருவா் கைது

கோவில்பட்டி அருகே மது விற்பனையில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே மது விற்பனையில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீஸாா், செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மந்தித்தோப்பு சாலையில் மதுக் கடை அருகே நின்று வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டாா் சைக்கிளில் 40 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் ராஜீவ் நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் தங்கமாரியப்பன் (45), விஜயாபுரி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் மணிகண்டன் (43) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 40 மது பாட்டில்களையும், மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com