கோவில்பட்டி அருகே விபத்து: இருவா் காயம்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

கோவில்பட்டி ஊருணித் தெரு சண்முகம் மகன் ராஜாமணி(70). இவா் இளையரசனேந்தல் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்குள் நுழைய மோட்டாா் சைக்கிளை திருப்பிய போது, திருவேங்கடம் நாரணாபுரம் மாரியப்பன் மகன் பாண்டிசெல்வம்(26) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள், ராஜாமணி மோட்டாா் சைக்கிளின் பின்புறம் மோதியதில், இருவரும் காயமடைந்தனா்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், பாண்டிசெல்வம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். பலத்த காயமடைந்த ராஜாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com