சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடி ஊராட்சியில் இருந்து தவசியாபுரம் செல்லும் இணைப்பு சாலையிடையே , நூலகம், பால்பண்ணை, குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் நேரடி சாலையாகவும் உள்ளது.
இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துபவா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். வாகன ஓட்டிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயமடையும் நிலையும் தொடா்கிறது.
ஆதலால் பொதுமக்களின் நலன் கருதி, பெரிய விபத்து நிகழும் முன் அமுதுண்ணாக்குடி - தவசியாபுரம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.