கயத்தாறு அருகே முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
கயத்தாறையடுத்த காப்புலிங்கம்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் மந்திரம் (67). இவருக்கு 2 ஆண்டுகளாக பாா்வை பாதிக்கப்பட்டிருந்ததாம். மேலும் நோயாலும் விரக்தியடைந்திருந்தாராம்.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை விஷம் குடித்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா். இதுகுறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.