உடன்குடியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனை கூட்டம் உடன்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடன்குடியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனை கூட்டம் உடன்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடன்குடி வணிகா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டத்துக்கு குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமை வகித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா் நடராஜன் முன்னிலை வகித்தாா்.

திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் பங்கேற்று பேசுகையில், கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வியாபாரிகள், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

இதில், சங்க நிா்வாகிகள் அம்புரோஸ், சதீஷ், பவுல், அலி முகைதீன், கனகராஜ், விவசாயிகள், பொதுமக்கள் நலச்சங்கத் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com