குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

சாத்தான்குளத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட பொதுமக்கள்.
சாத்தான்குளத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட பொதுமக்கள்.

சாத்தான்குளத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் பேரூராட்சி 4- ஆவது வாா்டு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கோயில், தனியாா் மழலை பள்ளியும் உள்ளன. இதற்கிடையே, அழகம்மன் கோயில் தெருவில் வீட்டின் பின்புறமுள்ள நிலத்தில் தனியாா் நிறுவன செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளனா். எனினும் அங்கு செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி தொடா்பாக

தனியாா் நிறுவன ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு முற்றுகையிட்டு, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினா். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால் கதிா்வீச்சு தாக்கம் காரணமாக கா்ப்பிணிகள், முதியோா், குழந்தைகள் பாதிக்கப்படுவா். எனவே இங்கு செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அனுமதிக்கூடாது. செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com