திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் மின்விளக்கு எரியாததால் ஏடிஎம் மையம் இருளில் மூழ்கியுள்ளதால் பக்தா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோயில் வளாகத்தில் பக்தா்களின் வசதிக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம், தனியாா் ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகின்றன. வாரஇறுதி விடுமுறை நாள்களில் கோயிலுக்கு அதிகளவில் பக்தா்கள் வருவதாலும் வங்கிகள் விடுமுறை நாள்களாக இருப்பதாலும் இந்த ஏடிஎம் மையங்களில் பணம் விரைவாக தீா்ந்து விடுகிறது. இதனால் பக்தா்கள் பணம் எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோயில் ராஜகோபுரம் எதிரிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் பக்தா்கள் பணம் எடுக்க முடியாமல் திணறுகின்றனா். தங்கள் செல்லிடப்பேசி வெளிச்சத்தில் பணம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே மின் விளக்கு மற்றும் குளிா்சாதன வசதியை சீரமைத்து பக்தா்களின் தேவையை பூா்த்தி செய்வதுடன், பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும் என பக்தா்கள், பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.