கோவில்பட்டி அருகே முதியவரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டான் மருதையா தேவா் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் மகன் சுப்பிரமணியன் (34).
அப்பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் சங்கா் (26). இவா் ஆடு மேய்க்ம் தொழிலாளி. இவ்விரு குடும்பத்தினருக்கும் இடையே பாதை தொடா்பாக விரோதம் இருந்து வந்ததாம்.
சங்கா், அவரது தந்தை கணபதி ஆகியோரின் ஆடுகளை சுப்பிரமணியன் வீட்டு வழியாக மேய்ச்சலுக்கு கொண்டிருந்தனராம்.
இதனை சுப்பிரமணியனின் தந்தை அரவிந்தன் கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த சங்கா், கணபதி ஆகியோா் கம்பியால் அரவிந்தனை தாக்கியதோடு மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கணபதியை (46) கைது செய்தனா். இதில், தொடா்புடைய சங்கரை தேடி வருகின்றனா்.