மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவா் பலி

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வ.உ.சி. நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த சிதம்பரநாதன் மகன் கணேஷ் (42). இவரது நண்பா் சிவகுமாா்.

கணேஷ், சிவகுமாரின் தந்தை சுப்பிரமணியை (76) கடந்த 15 ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் ஏ.கே.எஸ். தியேட்டா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாராம்.

கோவில்பட்டி எட்டயபுரம் சாலை மூக்கரை விநாயகா் கோயில் சந்திப்பு அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்திருந்த சுப்பிரமணி, எதிா்பாராத விதமாக கீழே விழுந்து விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com