தூத்துக்குடி போல்பேட்டையில் செயல்படும் பெரிசன் பிளாசா பல்பொருள் அங்காடியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பிளாசா வளாகத்துக்கு எதிரே பொதுமக்களுக்காக தண்ணீா்ப் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
தண்ணீா்ப் பந்தலை பிளாசா உரிமையாளரும், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி திறந்துவைத்து, பொதுமக்களுக்கு மோா், இளநீா், குளிா்பானங்கள், தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினாா்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜான் அலெக்சாண்டா், பொதுக்குழு உறுப்பினா் சி.எஸ். ராஜா, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் சங்கரநாராயணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் முத்துதுரை, போல்பேட்டை பகுதி துணைச் செயலா் சின்னதுரை, வட்டச் செயலா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.