கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை 660 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவில்பட்டி பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோருக்கு கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகம், நகா் நல மையங்கள், கடம்பூா், வெள்ளாளன்கோட்டை, கழுகுமலை ஆகிய இடங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 660 போ் பரிசோதனை செய்துகொண்டனா்.