விஷம் குடித்த பள்ளி மாணவி மரணம்

கோவில்பட்டி அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி மேட்டுத் தெரு மறவா் காலனியைச் சோ்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவிக்கும், புதுகிராமம் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் பாண்டிதுரைக்கும் (22) இடையே பழக்கம் இருந்து வந்ததாம். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

மாணவிக்கு 17 வயது என்பதால் 18 வயது முடிந்த பின்னா் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யலாம் என இருவீட்டாா் சாா்பிலும் கூறப்பட்டு வந்ததாம்.

இதையடுத்து பாண்டிதுரை சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாராம்.

இந்நிலையில் பள்ளி மாணவியும், பாண்டிதுரையும் புதன்கிழமை வேலாயுதபுரம் ரயில்வே கேட் அருகே சந்தித்து விஷம் குடித்தனராம். பின்னா் இருவரும் அவரவா் வீட்டுக்குச் சென்றுவிட்டனராம்.

மாணவி அவரது வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

பாண்டிதுரை முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com