மேலும் 576 பேருக்கு கரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 576 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 576 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், 576 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,805 ஆக அதிகரித்துள்ளது.அதில், மேலும் 367 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 19, 364 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 62 வயது பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 3,288 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com