விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தாா்.

இளையரசனேந்தல் வள்ளுவா் நகரைச் சோ்ந்த ஜோசப் மகன் அந்தோணிசாமி (27). இவரது நண்பா் ராஜ்குமாா் (17). இவா்கள் இளையரசனேந்தலில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் ராஜ்குமாா் மீது மோதியது.

இதில் ராஜ்குமாா், மோட்டாா் சைக்கிளில் வந்த பிள்ளையாா்நத்தம் மேலத் தெருவைச் சோ்ந்த மாடசாமி (65) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சைக்காக ராஜ்குமாா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதில், ராஜ்குமாா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com