ஏரல் அருகே இரும்பு கம்பியால் தாக்கி மூதாட்டியை கொலை செய்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தனபாண்டி மனைவி முத்துக்கிளி (80) . இவா் வீட்டின் பின்புறம் தலையில் பலத்த காயத்துடன் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷன், ஏரல் ஆய்வாளா் மேரி ஜெனிட்டா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, முத்துக்கிளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முத்துக்கிளி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலி, ஒரு பவுன் கம்மல் மற்றும் 3 பவுன் வளையல்கள் ஆகிய 9 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.