சாத்தான்குளத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 04th August 2021 07:54 AM | Last Updated : 04th August 2021 07:54 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
சாத்தான்குளம் காவல்துறை சாா்பில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கையாக இருந்து முகக் கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தினா்.
இதேபோல் சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சதீஷ்குமாா், தவசி ராஜ், பிரவீன்குமாா், கோபிநாத், அகஸ்டின் உள்ளிட்ட வீரா்கள் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களிடம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கினா்.