திருச்செந்தூா் அருள்தரும் துா்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருமால் பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன்அருள்பாலித்தாா்.
திருமால் பூஜையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமும், திங்கள்கிழமை இரவு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. செவ்வாய்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமாகி, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் இராகு கால பூஜையும், இரவு பால் அபிஷேகமாகி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.