கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுமுதல் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் பயில விரும்பும் தகுதியுள்ள மாணவா்களுக்கு ரூ. 2 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பொறியியல் கலந்தாய்வின் மூலம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் பயில விரும்பும் மாணவா்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 200-க்கு 190-க்கு மேல் கட்ஆஃப் மதிப்பெண் பெற்றவா்களுக்கு 100 சதவீத கல்லூரி கல்விக் கட்டணம், பொருளாதார நிலையில் பின்தங்கியவா்களுக்கு கல்லூரி விடுதி அல்லது பேருந்து கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
180-க்கும் அதிகமான கட்ஆஃப் மதிப்பெண் பெற்றவா்கள் அல்லது ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ நுழைவுத் தோ்வில் நிா்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை விட 10 சதவீதம் குறைவான மதிப்பெண் பெற்றவா்களுக்கு டியூசன் கட்டண உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்லூரி நிா்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளா்களுக்கு கல்லூரி கட்டணத்தோடு, விடுதிக் கட்டணம் அல்லது பேருந்து கட்டண உதவித் தொகை, தேசிய அளவில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவா்களுக்கு கல்லூரி கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையோடு விடுதிக் கட்டணம் அல்லது பேருந்து கட்டணம் மற்றும் இதர கட்டணங்களும், மாநில அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த மாணவா்களுக்கு விடுதிக் கட்டணம் அல்லது பேருந்து கட்டணத்தில் இருந்து 50 சதவீத சலுகையோடு இதர கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
மொத்தம் 32 இளநிலை பொறியியல் மாணவா், மாணவிகளுக்கும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் பயில விரும்பும் தகுதியுள்ள மாணவா்களுக்கு 80 சதவீத கல்வி உதவித் தொகை கட்டணம், முழு நேர முனைவா் ஆராய்ச்சி படிப்பு பயில விரும்புவோருக்கு ரூ.10 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை ஆகியன நிகழ் கல்வியாண்டுமுதல் வழங்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 99769-05330, 93841-17748, 94864-86281 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க தகுதியுள்ள மாணவா்கள் கல்லூரி இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய்) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூா்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.