தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஒரு நபா் ஆணையத்தின் 29ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22, 23ஆம் தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன், 29ஆவது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராக 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குநா் வழக்குரைஞா் ஹென்றி டிபேன், சம்பவத்தின்போது காயமடைந்த காவல் துறையினா், சேதமடைந்த காவல் துறை வாகனங்களின் ஓட்டுநா்கள் ஆகியோா் அருணா ஜெகதீசன் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஹென்றி டிபேன் கூறுகையில், ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.